Friday, July 22, 2011

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

முத்துலட்சுமி (ரெட்டி)
கோயில்களில் பெண்களைப் பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப் பிராயம். ஏனெனில், கோவில்களில் கட வுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக் கும் மதிப்பும், சமய சமுக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. 

அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கை யுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும்விட்டது. ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாக வாவது அல்லது நாட்டின் சுயமரியாதை யையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத் தையோ, நலத்தையோ, கோரின அரசாங்க மாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.

ஆனால், நமது இந்தியாவில் வெள் ளைக்கார ஆட்சி குடிபுகவும் நிலை பெற வும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால் அப்பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர்களும் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்தால் அந்தப் பார்ப்பனர்கள் சொல் லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப் பனர்களுக்கு விரோதமாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறை யிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.

ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர் களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதை களை அடியோடு வெளியாக்கி சீர்திருத் தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக் காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட் டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித் தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத் திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப் போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இது சமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன  அபிப்பிராயத்திற்கு  வரநேர்ந்ததுமாகும். 

நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டி ருக்கும், பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது வெகுகாலமாகவே ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொதுமகாநாடு களிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப் பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப் பட்டும் வந்திருக்கின்றது.  இது சம்பந்த மாக, திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார். அதன் சுருக்கமாவது.

தேவதாசி மசோதா

இந்த சமுகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருஷ முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசிய மகாநாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப்பதற் காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங் களையும் அறிந்து தம்மால் கூடியவரை ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்தியா கவர்ன்மெண்டும், இந்த தேவதாசி  மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது. 1912ஆம் வருஷம் பழைய இம்பீரியல் சட்ட நிருபண சபையில், மூன்று இந்திய அங்கத்தினர்கள், கனம் மாணிக்ஜிதாதா பாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள் இந்தக் கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறு மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர். 

இந்திய சர்க்கார், உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களா கவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள். 

அந்த ரிப்போர்ட் மறுபடியும் இப்போ தைப் போலவே பொதுஜன அபிப்பி ராயத்துக்கு விடப்பட்டது. இம்மசோ தாவை நிறைவேற்றுவதில் எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்தபோதிலும், அத் தகைய பெண்களை எவ்வாறு காப் பாற்றுவது என்பது போன்ற சில சில்லரை விவாதங்கள் கிளப்பிவிடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அதுசமயம் மறைந்துவிட்டது. அதன் பின்னர் மகாயுத்தக் கிளர்ச்சியினால் அது கவனிக்கப்பட முடியாமல் போயிற்று.

பிறகு 1922ஆம் வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டுவந்தார். மேற்படி தீர்மானத் தின்மேல் விவாதம் நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொதுஜன அபிப்பிரா யத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரேரேபனை அதிகப்படியான ஓட்டு களால் தோற்கடிக்கப்பட்டது. பிறகு மேல் படி 1922ஆம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924ஆம் வருஷம் அதை சட்ட மாக்கப்பட்டதோடு, அதை அனுசரித்து இந்தியன் பினல்கோடு 372, 373 செக் ஷன்கள் திருத்தப்பட்டன. 

அதன் சட்டம் 1925ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமலுக்கு வந்தது. ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக்கட்டுதல் கூடாதென்று சாஸ்திரத் தால் தடுக்கப்பட்டிருக்கிறது.  ஏனெனில், பொட்டுக்கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டுமாதலால் 14 வயதிற்குள்தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. 

அதாவது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்குமேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனுமதிப்ப தில்லை.  ஆனால், இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு  16 வயதிற்குக் கீழ்ப் பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப் பட்டால்  கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அனேக கேகள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றிருக்கிறார்கள்.

ஆகவே, வைதிகர்களது அபிப்பிரா யப்படி பார்த்தாலும்கூட, சாஸ்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில்களில் பொட்டுக்கட்ட  மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பினல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக்கட்டுவது குற்ற மென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்தரவு பெற்றுவிடுகிறார்கள்.

இது விபசாரத்துக்கு அனுமதி கொடுத்த தாகுமேயன்றி வேறில்லை. பொதுஜன அபிப்பிராயம் இதைச் சட்டமாக்க அனுகூலமாயேயிருக் கிறது.  பத்திரிகைகளில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக்கூட்டங்களில் ஆதரித் துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண்-பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறை வேற்றியும் இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும் சமுகத்தினரே இதைச் சட்டமாக்க வற் புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டிடிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக் கின்றனர். 

இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத் திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட கொடிய சமுகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பது போல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானதுமல்லாமல், இந்து மதத் திற்கே பெரும் பழியுமாகும். 

ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகு மாகையால் இவ்வழக்கம் பெண்களின் அந்ததையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமுகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும்,, பின்னர் அவர்களை இழிந்த சமுகமாகக் கருதுவதும் பெரும் சமுகக் கொடுமையாகும். சிறு குழந்தை களிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமுக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலைமையில் இனி இதைப் பற்றி பொதுஜனங்களுடைய அபிப்பிரா யத்தைத் தெரியவேண்டிய அவசியமே இல்லை.

தவிர இதுவிஷயத்தில் சாஸ்திர சம் பந்தமான  வைதிகர்களின் ஆட்சேப ணைக்கும் இடமில்லை. ஏனெனில் சாதிரத்தில் 14 வயதுக்கு முன் கன்னிப் பெண்ணாய் இருக்கும்போதுதான் பொட்டுக்கட்ட வேண்டும் என்று இருக் கின்றது இந்தியன் பினல்கோட் 372, 373 செக்ஷன்களின்படியோ 18 வயதுக்குள் பொட்டுக்கட்டக்கூடாது என்றும், கட்டினால் ஒரு வருஷக் கடினக்காவல் தண்டனையும் அபராதமும் என்றும் இருக்கின்றது. 

ஆகவே, இதுவிஷயத்தில் வைதிகமும் இந்துமதமும் 1924 வருஷத்திலேயே ஒழிந்துவிட்டது. இந்நிலையில் இப்போதைய வைதிகர்கள்  என்பவர்கள் இதை ஆட்சேபிப்பதனால் ஒன்று அவர்களது சாதிரம் அவர் களுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது தாசிகள் மூலம் தங்கள் வகுப்பார்களில் சிலர் வயிறுவளர்ப்பது கெட்டுப்போகுமே என்கின்ற ஜாதி அபிமானமாக இருக்கவேண்டும். அடுத்தாற்போல் பொதுஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாக வோதான் இருக்க வேண்டும். 

ஏனெனில் இந்து சமுகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமுகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப்போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமுகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களே யானால் அவர்களைப்போல் சுயமரியாதை யற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்கமுடியாது.

எந்தப் பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக்கலாம் என்று கருதி அதற்காக சுவாமியையும், மதத்தையும் உதவிக்கு உபயோகப்படுத்த நினைத்தால் அவர் களைப்போல் ஈனப்பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது. 

ஆகவே இந்தச்சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கிய முமான காரியமுமாகும். ஆனால், அந்தப் படி நிறைவேற்றப்படாமல் இருக்கச் சட்ட மெம்பர் ஆட்சேபணைகளைக் கிளப்பி இதை பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தடைப் படுத்திவிட்டது மிகவும் வருந்தத்தக்க தாகும். 

அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுக் கொடுத்தது அவர்களுக்கு மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியார்கள் இந்தக் காரியத்தைக்கூட செய்ய முடியவில்லை யானால் பின் என்ன வேலை செய்யத்தான் அந்தச் சட்டசபையை நடத்திக் கொண் டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. 

காங்கிரகாரர்கள்  சட்டசபையில் இல்லாததால் இச் சட்டம் நிறைவேறாமல் போயிற்று என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் நமக்கு எழுதி இருப்பதைப் பார்க்க நமக்குத் தாங்க முடியாத அவமான மாகவே இருந்தது.

எப்படியானாலும் அடுத்த சட்டசபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறா மல் போகுமேயானால் சர்க்காரின் யோக்கியத்திலும், ஜஸ்டிஸ் கட்சியாரின் சுய மரியாதையிலும் தெருவில் போகின் றவனுக்குக்கூட மதிப்பும் நம்பிக்கையும் இருக்காதென்றே சொல்லுவோம்.
தந்தை பெரியார்
- குடிஅரசு -  தலையங்கம் -23.03.1930

No comments:

Post a Comment